உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இந்த ஆண்டு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பெறுவோர் விபரம்

                 முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இலவச அரிசி, தாலிக்கு தங்கம், ஏழைகளுக்கு உதவித் தொகை அதிகரிப்பு உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

              அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, இலவச கறவைமாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.

              இந்த வருடம் முதல் கட்டமாக பிளஸ்-2, பள்ளி மாணவ- மாணவிகள், முதல் ஆண்டு, 3-வது ஆண்டு கல்லூரி மாணவ-மாணவிகள், 2-வது, 4-வது ஆண்டு பொறியியல் மாணவிகள் முதலாவது மற்றும் 3-வது ஆண்டு பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கு இலவச “லேப் டாப்” வழங்கப்படுகிறது.

                 இதன் மூலம் பள்ளிகளில் 5.47 லட்சம் கலை அறிவியல் கல்லூரிகளில் 2.91 லட்சம் என்ஜினீயரிங் கல்லூரியில் 24 ஆயிரம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

                தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 85 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு (2011-2012) 25 லட்சம் குடும்பங்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. சென்னையில் மாநகராட்சி ஆணையர் கட்டுப்பாட்டிலும், மற்ற மாவட்டங்களில் வருவாய்த்துறை மூலம் மாவட்ட கலெக்டர்கள் பொறுப்பிலும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்படும்.

               இவற்றை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் மூலம் வட்ட அளவில் சேவை மையங்கள் நிறுவப்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் இந்த பொருட்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்து கொள்ளலாம்.இந்த வருடம் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

              முதலில் கிராமப்பகுதியில் உள்ள பெண்களுக்கும், அடுத்து பேரூராட்சி, நகராட்சி, பின்னர் மாநகராட்சி பகுதிகளில் இவை வழங்கப்படும். ரேஷன் கார்டு உள்ள குடும்பத்தில் இருக்கும் பெண்ணிடமே இந்த பொருட்கள் வழங்கப்படும்.பெண் உறுப்பினர்களே இல்லாத குடும்பத்தில் குடும்பத் தலைவரிடம் இந்த இலவச பொருட்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் படி மாவட்டங்களில் பயன் பெறுவோர் எண்ணிக்கை வருமாறு:-

சென்னை- 19,30410, 
கோவை- 9,77021, 
வேலூர்- 9,07448, 
விழுப்புரம்- 89,7565, 
சேலம்- 84,9915, 
நெல்லை- 7,98503, 
மதுரை- 7,74015, 
திருச்சி- 7,15699.
கடலூர்- 641621, 
திருவண்ணாமலை- 641255, 
திருப்பூர்- 6,34999, 
தஞ்சாவூர்- 6,24804, 
ஈரோடு- 6,12587, 
காஞ்சீபுரம்- 5,84448, 
திண்டுக்கல்- 5,80299, 
கன்னியாகுமரி- 5,15022, 
விருதுநகர்- 5,05253. 
திருவள்ளூர்- 4,89806.
 கிருஷ்ணகிரி- 4,40539, 
தூத்துக்குடி- 4,36359, 
நாகப்பட்டினம்- 4,24739, 
நாமக்கல்- 41,9318, 
புதுக்கோட்டை- 4,01608, 
தர்மபுரி- 393771, 
தேனி- 3,73397, 
ராமநாதபுரம்- 3,66788, 
சிவகங்கை- 3,60875, 
திருவாரூர்- 3,25429, 
கரூர்- 2,78105, 
நீலகிரி- 2,18003, 
அரியலூர்- 2,12223, 
பெரம்பலூர்- 1,52984. 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior