உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகள்: அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல்

      சட்டசபையில் நேற்று  சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எம்.சி. சம்பத் தாக்கல் செய்தார். 
அதில் கூறி இருப்பது:-

                 இன்றைய உலகில் மாணவ சமுதாயத்தினருக்கு லேப்-டாப் இன்றியமையா கல்வி சாதனமாக உள்ளது. மாணவ-மாணவிகளக்கு இலவச லேப்-டாப் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கலை, மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் இது வழங்கப்படுகிறது.

               இந்த ஆண்டு மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் இதை பெற உள்ளனர். பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவிகளும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் 2 லட்சத்து 91 ஆயிரம் மாணவ-மாணவிகளும் லேப்டாப் பெற உள்ளனர். இதே போல் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 24 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பாலி டெக்னிக்கில் 50 ஆயிரம் மாணவர்களும் லேப்டாப் இலவசமாக பெற உள்ளனர்.

                இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1-ம் ஆண்டு, 3-வது ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பொறியியல் கல்லூரி களில் இரண்டாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டுமாணவர்களும், பாலி டெக்னிக்கில் 1-வது மற்றும் 3-வது ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்படும்.   மாணவ-மாணவிகள் பெறும் லேப்டாப்பை இயக்குவது குறித்தும் அதை விளக்கி சொல்லவும் பழுது நீக்கவும் தாலுகா தோறும் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior