உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 10, 2011

நெய்வேலி மாணவி கே.சிவசங்கரி பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்க உதவுங்கள்


மாணவி கே.சிவசங்கரி
நெய்வேலி:
 
         பிளஸ் 2 தேர்வில் 986 மதிப்பெண் பெற்று பண்ருட்டி அண்ணா பல்கலையில் பொறியியல் பயில வாய்ப்புக் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவி கே.சிவசங்கரி நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார்.  
 
      நெய்வேலி வட்டம், 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி கே.சிவசங்கரி, பிளஸ் 2 தேர்வில் 986 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  என்.எல்.சி. அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் குடிசையில் வசித்து வரும் சிவசங்கரியின் தந்தை இறந்துவிட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்து படித்து வருகிறார்.  
 
            இவரது தாய் பார்வதி வீடுகளில் சமையல் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். சிவசங்கரிக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் மாணவி அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் கலந்து கொண்டு, பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலை பிரிவில் பொறியியல் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  
 
              இந்நிலையில் சிறந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்ற மாணவிக்கு கல்லூரியில் ஆண்டுக் கட்டணத்தை செலுத்த போதிய வசதியில்லாமல் தவித்து வருகிறார். இதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களை அணுகியும் இதுவரை நிதி கிடைக்கவில்லை.  இந்நிலையில் மாணவி சிவசங்கரி தனது பொறியியல் படிப்பைப் படிக்க ஆர்வமாக உள்ளதால் கொடையுள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.  
 
                  மாணவியின் எதிர்காலம் பிரகாசிக்க உதவிபுரிய முன்வருவோர், மாணவியின் விவரத்தை அறிந்து அவர் பயின்ற என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு உதவலாம். 
 
தொலைபேசி எண்:
 
 
04142-255972
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior