உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

கடலூர்:
              
          கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, புதன்கிழமை நடந்தது.  

               அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகவும், நேரடியாகவும் தேர்வு செய்யப்பட்ட, பி.இ., பி.டெக். மற்றும் எம்.சி.ஏ. மாணவர்களுக்கு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப் பட்டன. தொடக்க விழாவுக்கு பொறியியல் கல்லூரித் தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கடலூர் நாகர்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.எஸ். மனேகரன் கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்தினார். 

               கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அவர், மடிக் கணினிகளை வழங்கினார்.  கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்.விஜயகுமார், பொறியியல் கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் ஆனந்த் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, கல்லூரி இயக்குநர் டாக்டர் கே.எத்திராஜுலு, முதல்வர் டாக்டர் பி. சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior