உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்?

              அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக இந்த ஆண்டு 1600 குடும்பங்களுக்கு கலப்பின கறவை மாடுகளும், 1600 குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள், அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று  வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பது:-

              பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தினரில் ஒருவரும் மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டாது.

               பயனாளிக்கு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும். பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.
கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  
 
 
 
PIN குறிப்பு : கடந்த திமுக ஆட்சியின் இலவச வண்ணத் தொலைகாட்சி பெட்டியை 500க்கும், 1000க்கும் விற்றனர். அதேபோல் இந்த கறவை மாடுகளையும்  நம்ம தன்மான தமிழ் மக்கள் விற்று விடுவதை தடுப்பதற்காகத்தான் இந்த நான்கு ஆண்டு உறுதிமொழியாம்....................
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior