உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன

சிதம்பரம் : 

                     சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (17ம் தேதி) நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (19ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டுகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

                 அதன்படி சிதம்பரம் நகர மன்ற தேர்தலில் ஓட்டு போட 370 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் என 20 பேர் நீக்கப்பட்டு 350 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

பண்ருட்டி:

                ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 325 பேருக்கு வீட்டின் முகவரிக்கு ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணி நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. துணை பி.டி.ஓ., தனுசு தலைமையில் ஊழியர்கள் ஊராட்சி வாரியாக தபால் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து அனுப்பினர். ஓட்டு சீட்டு பெற்றவர்கள் ஓட்டுப்பதிவு செய்து ஓட்டு எண்ணும் நாளான 21ம் தேதி காலை 7 மணிக்குள் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் மற்றும் பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior