உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலத்தில் இரண்டு ஓட்டுப் பதிவு மையங்ககளில் மின்னணு இயந்திரத்தில் பழுது

விருத்தாசலம் : 

                 விருத்தாசலத்தில் இரண்டு ஓட்டுப் பதிவு மையங்ககளில் மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமானது. விருத்தாசலம் 16வது வார்டு பெரியார் நகர் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண்.17ல் (பொது பிரிவு) நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியபோது மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. 

              இதனையடுத்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மண்டல அலுவலர் மின்னணு இயந்திரத்தை சோதனை செய்து பார்த்தபோது இயங்கவில்லை. பின்னர் மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இதேப்போன்று 24வது வார்டு வடக்கு கோட்டை வீதி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஓட்டுச் சாவடி எண். 29ல் (பெண்கள் பிரிவு) ஓட்டுப் பதிவு துவங்கியபோது மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களே அதனை சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் ஓட்டுப் பதிவு தாமதமானது.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior