உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 12, 2011

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்


 முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை 

             கடலூர் மேற்கு மாவட்டம் கீரப்பாளையம் துணை செயலாளர் கர்ணன், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி சுகந்தி, கே ஆடூர் காலனி கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ஜெயச்சந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் ஊராட்சி செயலாளர் பால்ராஜ், மடுவன்கரை காலனி கிளை செயலாளர் ஜெயபால், மஞ்சக்குழி ஊராட்சி செயலாளர் மாலிக், 6-வது வார்டு பாலையா, குமாராட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன், நந்திமங்கலம் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், வல்லம்படுகை மெயின்ரோடு காலனி கிளை செயலாளர் ராஜேந்திரன், மங்களூர் ஆ.களத்தூர் கிளை செயலாளர் ராமலிங்கம், பரங்கிபேட்டை பேரூராட்சி 8-வது வார்டு செயலாளர் ஜெயசங்கர், 14-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன்.  அண்ணாமலை நகர் பேரூராட்சி அவை தலைவர் குஞ்சுபாண்டியன்,         பேரூராட்சி இணை செயலாளர் கலாவதி, 11-வது வார்டு செயலாளர் நடராஜன், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், பொருளாளர் லோகநாதன், 12-வது வார்டு செயலாளர் ஜெயராமன். பெண்ணாடம் பேரூராட்சி பாபு ராஜேந்திரன், கெங்கைகொண்டான் பேரூராட்சி அவை தலைவர் பிரபு. ஆகியோர் இன்று முதல் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior