உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

கடலூர் நாணமேட்டில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு

http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/6de0c4f2-eb57-46b1-9b33-e327b3a814e4_S_secvpf.gif



கடலூர்:

          கடலூர் அருகே உள்ள நாணமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 50). கூலித்தொழி லாளி. இவரது மனைவி தையல்நாயகி (45). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சாமிதுரை நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

             நள்ளிரவு பெய்த மழையில் அவரது வீட்டின் மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தையல்நாயகி படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக செத்தார்.

           இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அய்யம்மாள் (55). நேற்று இரவு அந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

              இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அய்யம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து துக்கணாம் பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior