உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/d7b9a7b9-fe23-41ad-971f-3f1d0e514ba1_S_secvpf.gif
 
கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி
 
கடலூர்:

                கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 260மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் கலெக்டர் அமுதவல்லி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்ப்பில் 3 பேருக்கு இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினார். வருவாய்துறை மூலம் கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நாணமேடு கிராமத்தை சேர்ந்த தையல்நாயகியின் கணவர் சாமிதுரைக்கும், வடுகபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது கணவர் கலியமூர்த்திக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, செய்தி மகக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior