உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் : 

            கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77 லட்சத்து 4,840 ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செலவினத்திற்காக ஊராட்சி நிதி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர்கள் தங்கள் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்திட அறிவுறுத்தப்படுகின்றனர் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior