உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் : 

           கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார். 

              கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார் கட்டடங்களிலும், அரசு கட்டடங்களில் போதிய இடவசதி இல்லாமலும் இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. வெவ்வேறு இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க மற்ற மாவட்டங்களில் உருவாக்கியது போல் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பெருந்திட்ட வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

               அதன்பேரில் தற்போது கலெக்டர் அலுவலகம் இயங்கி வரும் இடத்தில் உள்ள குளத்தை மூடி, ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் 6 அடுக்கு கட்டடம் கட்ட கலெக்டர் அமுதவல்லி ஆலோசனையின் பேரில் பொதுப்பணித் துறை சார்பில் பூர்வாங்க திட்ட வரைபடத்துடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், கடலூரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior