உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 17, 2011

கடலூரில் 28 கோடி மதிப்பில் புதிய பெருந்திட்ட வளாகம்

கடலூர் : 

            கடலூரில் 28 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் (கலெக்டர் அலுவலகம்) கட்டப்படவுள்ளது என கலெக்டர் அமுதவல்லி கூறினார். சென்னையில் முதல்வர் ஜெ., தலைமையில் 2 நாள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்று கடலூர் திரும்பிய கலெக்டர் அமுதவல்லியிடம் நேற்றுபேசினர். 

அப்போது கலெக்டர் அமுதவல்லி கூறியது:

             கடலூர் நகரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகம் (ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம்) அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது இயங்கி வரும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறமுள்ள பகுதியில் இதற்கான கட்டடம் அமையும். இடப்பற்றாக்குறையால் பல இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் செயல்படும்.ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு பதிவு செய்யும் எஸ்.எம். எஸ்., திட்டம் முதலில் தர்மபுரி மாவட்டத்திலும் இரண்டாவதாக கடலூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது.

            தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பெற்றறோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளியை பெருமளவு பயன்படுத்த முதல்வர் வலியுறுத்தியுள்ளார். முதல் கட்டமாக அரசு விடுதிகள் சூரிய ஒளியை பயன்படுத்த கருவிகள் அமைக்கப்படவுள்ளன.
 
           பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை போடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உருவாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து மக்காத குப்பையை பயன்படுத்தி தார் சாலைகள் அமைப்பது சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் போது 10 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து போடுவதற்கான சிறப்பு பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி கூறினார். பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தார்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior