உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

இலவச இலவச மடிக்கணினியில் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்கப்படும்

            கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்-ல் பொறியியல், கலை அறிவியல் பாடங்கள் பதிவு செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.கண்ணன் தெரிவித்தார்.

கோவையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தரமான கல்வி என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடந்த கருத்தரங்கைத் துவக்கி வைத்து தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் ஆர்.கண்ணன் பேசியது:

               கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்துவது என்ற இலக்கில் தமிழகம் வெற்றி அடைந்திருக்கிறது. அனைவரும் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் திறன் மிக்கவர்களாக மாணவர்களை மாற்றுவதற்காக, மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. ஆராய்ச்சிப் படிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக பிஎச்டி பட்டம் அளிப்பதற்கான நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

           உலகப் போட்டி, பல்வேறு துறைகளின் வியத்தகு வளர்ச்சிக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே நமக்கு சவாலாக இருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் பாடங்களை பதிவு செய்து அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். பாடங்கள் குறித்த விடியோ, பாடச் சுருக்கங்கள் இதில் இடம்பெறும். இது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார். சிஐஐ கோவை மண்டல தலைவர் ரவி சாம், சிஐஐ கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.கே.சுந்தரராமன், கே.செந்தில்கணேஷ் உள்ளிட்டோர் பேசினர்.












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior