உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

திட்டக்குடி நகைக் கடையில் ரூ.50 லட்சம் நகை கொள்ளை

கடலூர்:

           கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகைக்கடையில் ரூ. 50 லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

             திட்டக்குடி சின்ன கடைவீதியில் அடகுக் கடையுடன் இணைந்த நகைக் கடை வைத்து இருப்பவர் பூபதி (35).வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டார். அதிகாலை 2 மணி அளவில் இரண்டுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் அங்கு வந்து, நகைக் கடையின் 5 பூட்டுகளையும் உடைத்து 120 பவுன் நகைகள், 33 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்துள்ளனர். 

               அவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம். நகைகளை அவை வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் டிரேக்களுடன் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள், அவற்றை திட்டக்குடியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள, புலிவலம் ஓடையில் வீசியுள்ளனர்.இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி திட்டக்குடி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior