உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

         கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

             கடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப நபர்களிடம் இருந்து 2011-12ம் ஆண்டுக்கான சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடந்தது.இதில் 205 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஜே.சி.பி. ஓட்டுனர் பயிற்சி, வெல்டிங், பிட்டர் மற்றும் கணினி சம்பந்தமான பயிற்சிகள் நடைபெற உள்ளதால் 8ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி), முதல் பட்டயப் படிப்பு கல்வி பயின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கடலூர் நகராட்சி பொது சுகாதார பிரிவில் அனைத்து வேலை நாட்களிலும் 11ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நகராட்சி அலுவலகத்தில் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior