உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 01, 2012

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3 வரை ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளைப் புதுப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், மார்ச் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  தெரிவித்துள்ளார். 

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை, 1-1-2012 முதல் 31-12-2012 வரை, மேலும் ஓராண்டிற்கு நீடித்து அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. 30-12-2011 அன்று புயல் வீசிய காரணத்தால் கடலூர் மாவட்டத்தில், பிப்ரவரி முதல் தேதியில் இருந்து, குடும்ப அட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையாத காரணத்தால், 10-3-2012 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. 

            எனவே இதுவரை குடும்ப அட்டைகளை புதுப்பிக்காதவர்கள், 10-3-2012-க்குள் தங்களது குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 10-3-2012-க்குள் புதுப்பிக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior