உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 07, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய நூலுக்கு விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.


        புதுச்சேரியில் இயங்கி வரும் மூவொரு கடவுள் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்துறை இலக்கிய அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2010-ம் ஆண்டுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கிய விருதுக்கு கட்டுரைப் பிரிவின் கீழ் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலை தேர்ந்தெடுத்துள்ளது என அறக்கட்டளை நிறுவனர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ கடிதம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இதற்கான விருது மற்றும் நற்சான்றிதழ் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள அறக்கட்டளையின் 6-ம் ஆண்டு விழாவில் வழங்கப்படவுள்ளது.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior