உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 05, 2012

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி முதலிடம்

சிதம்பரம்

10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதீஸ்வரி சிதம்பரம் நகரில் முதலிடமும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். 

இம்மாணவி 

அறிவியலில் 100, 
கணிதம், சமூக அறிவியல், பாடங்களில் தலா 99,
 தமிழில்-96, 
ஆங்கிலத்தில்-97 


மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 


இப்பள்ளியில் தேர்வு எழுதிய 434 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி 81% தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


நகரில் முதலிடம் பெற்றுள்ள ஜோதீஸ்வரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கணேசன் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.

ஜோதீஸ்வரி அளித்த பேட்டி 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுப்பேன் என நம்பிக்கையுடன் இருந்தேன் 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டது. பள்ளியில் தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் அனைவரும் நன்கு பயிற்சி அளித்தனர். வீட்டில் இரவு, பகலாக படிப்பதற்கு பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். வருங்காலத்தில் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.அதிக மதிப்பெண் பெற்ற ஜோதீஸ்வரிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜன் மற்றும் ஆசிரியர்கள் நினைவுபரிசு வழங்கி பாராட்டினர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior