உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 425 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 425 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

 இதில் பள்ளி மாணவி கிருத்திகா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 
இவர் 
தமிழ் 98, 
ஆங்கிலம் 97,
 கணிதம் 97,
 அறிவியல் 99, 
சமூக அறிவியல் 99 மதிப்பெண்களுடன் 490 மதிப்பெண்கள் பெற்றார். 

மாணவர் ரேவந்த்குமார் 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம், 

மாணவி தேவிபாலா 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும்,

 475 மதிப்பெண் களுக்கு மேல் 32 மாணவர்களும், 

450 மதிப்பெண்களுக்கு மேல் 95 மாணவர் களும்,

 213 மாணவர்கள் 400க்கு மேல் எடுத்தனர்.

 அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் 19 பேரும், கணிதத்தில் ஒரு மாணவரும், சமூக அறிவியலில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தமிழில் முதல் மதிப்பெண் 98ம், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலர் வழக்கறிஞர் விஜயக்குமார்,செயல் அதிகாரி டாக்டர் சிரீஷா கண்ணன் பாராட்டினர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior