உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

கடலூர் உப்பனாற்றில் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்பு





 
கடலூர்: 
 
        கடலூர் உப்பனாற்றில் சனிக்கிழமை திடீரெனக் கலந்த ரசாயனக் கழிவுகளால், மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  
 
           சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை முதல் சென்னை வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக ரீதியான படகுகள் போக்குவரத்துக்காக, கடற்கரையையொட்டி ஆங்காங்கே, கடலுடன் தொடர்பு கொண்டு அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் என்ற நீர்வழிப்பாதைதான், தற்காலத்தில் உப்பனாறு என்று அழைக்கப்படுகிறது.  இந்த உப்பனாற்றில்தான் மேற்கு மாவட்டங்களில் இருந்து பெருக்கெடுத்து வரும் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு ஆகியவை கலந்து வங்கக் கடலில் சங்கமிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறந்த நீர்வழிப் பாதையாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய், பராமரிக்கப்படாமல் போனதால், தற்போது ஆங்காங்கே தூர்ந்துக் கிடக்கிறது. 
 
           சிறந்த வர்த்தகத்துக்காக ஆங்கிலேயர்களால் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கால்வாய், இன்று மிகப்பெரும் ரசாயனத் தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளவும், அவற்றின் கழிவுகளை விடுவதற்கும் ஏற்ற இடமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால், மக்களின் உடல் நலத்துக்குக் கேடுவிளைவிக்கும் மிகமோசமான ரசாயனக் கழிவுகளின் சங்கமமாக உப்பனாறு மாற்றப்பட்டு இருக்கிறது.  ÷உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 25-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் இவைகள் பெரும்பாலும் தங்களது ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றிலேயே கலந்து வந்தன.  
 
           இதனால் உப்பனாற்றில் உள்ள மீன்வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. மீன் வளம் வெகுவாகக் குறைந்ததுடன், மீனவர்களை மிகமோசமான தோல்நோய்களும் தொற்றிக் கொண்டன. இதனால் உள்நாட்டு மீனவர்கள் பலர் மீன்பிடித் தொழிலைவிட்டு கூலி வேலைகளுக்குச் சென்று விட்டனர்.  உப்பனாற்றில் பிடிபடும் மீன்களின் உடலிலும் ஃபுளோரைடு உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதற்கு, இந்த ரசாயனக் கழிவுகள் காரணமாக இருந்து இருக்கின்றன. 
 
         உப்பனாற்றில் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதற்கு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களில் விளைவாக உப்பனாற்றில் ஆலைக் கழிவுகள் கலப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  எனினும் பல ஆலைகள் இன்னமும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக, ரசாயனக் கழிவுகளை உப்பனாற்றில் கலந்து கொண்டு இருப்பதாகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இத்தகைய மோசமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க உப்பனாற்றின் கரையோரமாக, சாலை ஒன்று அமைக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை உப்பனாற்றில் செம்மங்குப்பம் அருகே, ரசாயனக் கழிவுகள் பெருமளவில் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களின் கால்களில், அரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். 
 
            இது குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குப் புகார் செய்தார். மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து உப்பனாற்றைப் பார்வையிட்டு, சோதனைக்காக ரசாயனக் கழிவுகள் கலந்த ஆற்றுநீரின் மாதிரியை எடுத்துச் சென்று உள்ளனர்.  ஆய்வுக்குப் பின்னரே, எந்த தொழிற்சாலையில் இருந்து, என்ன வகையான ரசாயனக் கழிவுகள் உப்பனாற்றில் கலக்கப்பட்டன என்ற விவரம் தெரியவரும்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் மாட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு ஏலம்

கடலூர்:

             கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் செயல்படும் பார்களுக்கு, செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது.  கடலூர் மாட்டத்தில் 231 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. 

              இவற்றுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன.  விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில் வைத்து, டெண்டர்கள் பிரிக்கப்பட்டன.  டாஸ்மாக் கிளை மேலாளர் காசி முன்னிலையில் டெண்டர்கள் பிரிக்கப்பட்டன.

             பார்களை நடத்த அதிகத் தொகை கோரியிருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 231 டாஸ்மாக மதுக்கடைகளிலும் பார் நடத்த டெண்டர் கோரப்பட்டு இருந்த போதிலும், 190 விண்ணப்பங்கள் மட்டுமே வந்து இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  231 கடைகளில் 40 முதல் 50 கடைகளில் மட்டுமே பார் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தக் கடைகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை அளித்து இருந்தனர்.







Read more »

திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்: சிப்காட் கூட்டமைப்பு கோரிக்கை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4ab06ee5-0b94-4cad-9c55-9c95fd47f962_S_secvpf.gif



கடலூர்:

        கடலூர் முதுநகரை அடுத்து சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ரசாயனம் வந்து செல்கிறது.

           இந்தநிலையில் நேற்று சிப்காட் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பில் தரமான சாலைவசதி, தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவிகள், கடலூருக்கு புறவழிச்சாலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏவிடம் விடுக்கப்பட்டது.

           அதற்கு அவர் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சிப்காட் கூட்டமைப்பு சார்பில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக சிப்காட் கூட்டமைப்பின் உதவி தலைவர் இந்திரகுமார் அனைவரையும் வரவேற்றார். தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். உதவி தலைவர் ஆனந்தகுமார் ஜோதி நன்றி கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

Read more »

புதன், ஜூலை 20, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம்


கடலூர்:

          கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பைக் கண்டித்து, தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

            இத்தொழிற்சாலையில் பென்ஸிலின்- ஜி என்ற மருந்து தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை ஸ்பிக் மட்டுமே. இத்தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 160 பேரும், மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் ஓராண்டுக்கும் மேலாக உற்பத்தி நடைபெறவில்லை. குறைந்த தொழிலாளர்களுடன் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடந்து வந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 100 பேருக்கு, ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

              மேலும் தொழிற்சாலையின் பிரதான கேட் மூடப்பட்டு உள்ளது. ஆள்குறைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதை எதிர்த்தும், கேட் மூடப்பட்டதைக் கண்டித்தும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை, தொழிற்சாலை முன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்துடன் தாசில்தார் அசோகன், துணைத் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் தங்கராஜ், தொழிலாளர் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்."

            ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும், தொழிற்சாலை கேட்டை திறக்க வேண்டும், இந்தியாவில் பென்ஸிலின்- ஜி தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை இதுவாக இருப்பதால், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ஸ்பிக் பார்மா தொழிற்சாலையில் ஆள்குறைப்பு: தொழிலாளர்கள் போராட்டம் வீடியோ காட்சி
















Read more »

வெள்ளி, ஜூலை 08, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 10 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கும் ரசாயனக் கழிவு நீரகற்று நிலையம்

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளின் கியூசெக்ஸ் எனும், பொதுக் கழிவு நீரகற்று நிலையம்.
கடலூர்:

             கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கான பொதுக் கழிவு நீரகற்று நிலையம் (கியூசெக்ஸ்), கடந்த 10 ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கிக் கொண்டு இருக்கிறது.  

             கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 32 தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயிண்ட் மூலப்பொருள்கள், பி.வி.சி. மூலப் பொருள்கள், சாயங்கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பவை.  இந்த ஆலைகள் நாளொன்றுக்கு, 2 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, பயன்படுத்துகின்றன. சிப்காட் ரசாயன ஆலைகளால் தொழிற்பேட்டையை அடுத்துள்ள கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவுக்கு மாசுபடுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். 

               ஆலைக் கழிவுகள் வங்கக் கடலிலும், உப்பனாற்றிலும் கலப்பதால், மீன் வளம் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த ஆலைகளின் சுத்திகரிக்கப்பட்ட திரவக்கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க, கியூசெக்ஸ் நிறுவனம், 2000-ம் ஆண்டு ரூ. 5 கோடி மூலதனத்தில் மேற்கண்ட ஆலைகளாலேயே உருவாக்கப்பட்டது.  இது நாளொன்றுக்கு 1.20 கோடி லிட்டர் ரசாயனக் கழிவுகளைச் சேகரித்து, கடலில் கலக்கும் திறன் கொண்டது. 

             இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து, இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.  காரணம் இந்த நிறுவனம் கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், மாசுக் கட்டுப்பாடு வாரிய தர அளவுகளின்படி இல்லை என்பதுதான்.  சுத்திகரிக்காத கழிவுகளை கியூசெக்ஸ் நிறுவனம் கடலில் கலப்பதாக, கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், ஆதாரங்களுடன் 2004-ம் ஆண்டு புகார் தெரிவித்தது. இச்செய்தி தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் வெளிவந்தது. இச்செய்திகளை சென்னை உயர்நீதிமன்றம் தன்னேற்பு மனுவாக எடுத்துக் கொண்டு, விசாரணை மேற்கொண்டது.  

             2010 அக்டோபரில் கியூசெக்ஸ் பொதுகழிவு நீரகற்று நிலையத்தை மூடுமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  ÷சுமார் ஒரு மாதம் மூடலுக்குப்பின் கியூசெக்ஸ் திறக்கப்பட்டது. கியூசெக்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மனு அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.   ரசாயன ஆலைகளின் திரவுக் கழிவுகளை, தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரி) 6 மாதம் ஆய்வு செய்து, அண்மையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது. அறிக்கை விவரங்களை அறிந்தபின், உயர் நீதிமன்றம், இறுதி ஆணையை பிறப்பிக்க உள்ளது.

து குறித்து சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன் கூறுகையில்

             கியூசெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து சுத்திகரிக்காத ரசாயனக் கழிவுகளை கடலில் கலப்பது சட்ட விரோதமானது.  இயக்க அனுமதி பெறாத ஒரு ஆலையை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்வதாகக் கூறுவதே சட்ட விரோதம். ரசாயனத் தொழிற்சாலைகள் செய்யும் தவறுகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உடந்தையாக இருக்கிறது. ஆலைகள் சுத்திகரிக்காத கழிவுகளை தனக்கு அனுப்புவதாக, கியூசெக்ஸ் நிறுவனமே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  

             அதன்மீதும் வாரியம் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் திருப்பூர் ஆலைக் கழிவுகளை, கியூசெக்ஸ் நிறுவனம் மூலம், கடலில் கலக்க இருப்பதாக அறிகிறோம். இத்திட்டம் ஏற்கப்பட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது என்றார்.  

இதுபற்றி கியூசெக்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி இந்திரகுமார் கூறுகையில், 

             "21 ஆலைகள் இதில் முன்பு உறுப்பினர்களாக இருந்தன. தற்போது 13 ஆலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் அனுப்பும் கழிவுகளை, கடலில் வெளியேற்றுவதே கியூசெக்ஸ் வேலை. ஆலைகள் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அனுப்பினால், எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. இது தொடர்பாக ஆலைகளுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.  அது குறித்து சம்மந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாசுக் கட்டுப்பாடு வாரியம்தான். கடந்த 8 மாதங்களாக கியூசெக்ஸ் நிறுவனம் நன்றாகச் செயல்படுகிறது. 

              எனவே கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் அனுமதி ( உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பின், வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.  திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளை சேகரித்து கடலில் கலக்க அனுமதி கேட்டனர். அந்த அளவுக்கு கியூசெக்ஸ் நிறுவனத்தில் வசதி இல்லை என்று கூறிவிட்டோம்' என்றார். 







Read more »

செவ்வாய், ஜூலை 05, 2011

கடலூர் சிப்காட்டில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமில் முறைகேடு : இணை இயக்குனர் மீது நடவடிக்கை

கடலூர் : 

           கடலூர் சிப்காட்டில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு புற்று நோய் இல்லை என அறிக்கை தருமாறு, டாக்டர்களை வலியுறுத்திய இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கிராமத்தில் மீண்டும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் கூறியது: 

           கடலூரில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வரும் சிப்காட் பகுதியை, சமீபத்தில் ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையம், இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு, 2,000 பங்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதைத் தவிர்க்க, புற்று நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பரிந்துரைத்தது. அதன்படி, மாவட்ட மருத்துவ இணை இயக்குனரகமும், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பும் இணைந்து, கடந்த 29ம் தேதி குடிகாடு கிராமத்தில் புற்றுநோய் கண்டறிய, முதல் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமை, கலெக்டர் அமுதவல்லி துவக்கி வைத்தார்.

                ஐந்து டாக்டர்கள் கொண்ட குழுவினர், பொதுமக்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். முகாம் துவங்கிய ஒரு மணி நேரத்தில் மொபைல் போனில் பேசியபடி உள்ளே வந்த மருத்துவ இணை இயக்குனர் (பொறுப்பு) கமலக்கண்ணன், டாக்டர்களிடம் பரிசோதனை விவரங்களை ஒருங்கிணைந்து, "நில் ரிப்போர்ட்' (புற்றுநோய் அறிகுறி இல்லை என அறிக்கை) தருமாறு கூறிவிட்டுச் சென்றார். இணை இயக்குனரின் இந்த மறைமுக உத்தரவால், புற்று நோய் கண்டறிய முதல் கட்ட சோதனையில் முறைகேடு நடந்துள்ளதாக அறிகிறோம். அதை உறுதி செய்யும் வகையில், முகாமில் பங்கேற்ற பொதுமக்களை பரிசோதித்த டாக்டர்கள் புற்றுநோய் கண்டறிவது குறித்து, எந்த விவரங்களையும் கேட்கவில்லை; சோதனையும் செய்யவில்லை.

              எனவே, இந்த முகாம் அறிக்கையை ரத்து செய்வதோடு, இணை இயக்குனர் மற்றும் முகாமில் பங்கேற்ற டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட், வேலூர் சி.எம்.சி., சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகங்களில் உள்ள புற்றுநோய் நிபுணர்களைக் கொண்டு, மீண்டும் சிப்காட் பகுதியில், விடுமுறை நாளில் முகாம் நடத்தி, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பரிசோதித்து, அறிக்கை தயாரிக்க வேண்டும்.
 
             முகாமில் நடந்த முறைகேடு குறித்து வீடியோ ஆதாரத்துடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளோம். கலெக்டரை நேரில் சந்தித்து வீடியோ சி.டி., மற்றும் புகார் மனுவை கொடுத்துள்ளோம். இவ்வாறு ராமநாதன் கூறினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior