உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்: சிப்காட் கூட்டமைப்பு கோரிக்கை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4ab06ee5-0b94-4cad-9c55-9c95fd47f962_S_secvpf.gif



கடலூர்:

        கடலூர் முதுநகரை அடுத்து சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ரசாயனம் வந்து செல்கிறது.

           இந்தநிலையில் நேற்று சிப்காட் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். அப்போது சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பில் தரமான சாலைவசதி, தொழிற்சாலைகளை மேம்படுத்த உதவிகள், கடலூருக்கு புறவழிச்சாலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏவிடம் விடுக்கப்பட்டது.

           அதற்கு அவர் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சிப்காட் கூட்டமைப்பு சார்பில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக சிப்காட் கூட்டமைப்பின் உதவி தலைவர் இந்திரகுமார் அனைவரையும் வரவேற்றார். தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். உதவி தலைவர் ஆனந்தகுமார் ஜோதி நன்றி கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior