உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கலெக்டர் ராஜேந்திர ரத்னு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் ராஜேந்திர ரத்னு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூரில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:
 
           கடலூரில் 63-வது குடியரசு தினத்தையொட்டி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசியகொடியை ஏற்றி வைத்து 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
           கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 63வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு முதல்வர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். தியாகிகளை கவுரவித்த, கலெக்டர் ராஜேந்திர ரத்னு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்துறை சார்பில் 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையும், தானே புயலில் பயிர் பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
 
         படகு சேதமடைந்த 10 மீனவர்களுக்கு நிவாரணம் உள்பட மொத்தம் 183 பேருக்கு 41 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் நடனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கூட்டு உடற்பயிற்சி, வேணுகோபாலபுரம் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், வேலவிநாயகர்குப்பம் பள்ளி மாணவிகள், தேச பக்தி பாடல்களுக்கு நடகமாடினர்
 
             . கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு சான்றிதழ்களை வழங்கினார். எஸ்.பி., பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சேர்மன் சுப்ரமணியன், சப் கலெக்டர் கிரண் குராலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், ஜனவரி 24, 2012

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் சீரமைக்க ரூ.2.53 கோடி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/f9c77e84-c776-49f6-ba78-7ae92804d286_S_secvpf.gif
 
 
 
கடலூர் : 

        "தானே' புயலால் சேதமடைந்த பின்னர் முதுநகர் பெண்கள் மேல்நிலையில் பள்ளியில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் சம்பத், சிறப்பு அதிகாரி மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர்.

             கடலூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. கடலூர் முதுநகர் பெண்கள் மேல்நிலையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சம்பத், புயல் நிவாரண சிறப்பு அதிகாரி அரசு செயலர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நகர மன்ற துணைத் தலைவர் குமார், கவுன்சிலர் கந்தன், கமிஷனர் வரதராஜன், சிறப்பு அதிகாரி இளங்கோவன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பிரேம்சந்த், செல்வராஜ், ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறியது:


         புயலில் பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு கட்டடங்கள் அரசு அலுவலகங்கள் சேதமடைந்தன. இதில் பொதுப்பணித் துறை சார்பில் 28 பள்ளிக் கட்டடங்கள் தற்காலிகமாக 74.88 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் புயலினால் சேதமடைந்த 316 பள்ளிகளையும் சீரமைக்க 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேதமான 81 சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி கட்டடங்களை சரி செய்ய 34 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகிறது.

          ஒன்றிய அலுவலகப் பகுதியில் சேதமடைந்த 128 கட்டடங்களை சீர மைக்க 1.06 கோடியும், சேதமடைந்துள்ள 103 கட்டடங்களை சீரமைக்க 77.36 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி பகுதியில் உள்ள சேதமடைந்த அரசு கட்டடங்களை பொது நிதியிலிருந்து சீரமைத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.










Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் விடியல் விழா! : இந்த ஆண்டு நடக்குமா என எதிர்பார்ப்பு


சிதம்பரம் : 

                சுற்றுலாத் தலமான பிச்சாவரம் கடற்கரையில் சூரிய தரிசன விழாவான 'விடியல் விழா' நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.
 
                 சுற்றுலாத் தலமான சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் இருப் பது சிறப்பு. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சிதம்பரம் வருகின்றனர். பிச்சாவரம் வன சுற் றுலா மையத்தையொட்டி அமைந்துள்ள சின்னவாய்க்கால் என்ற தீவு பகுதியில் இருந்து அதிகாலை சூரிய உதயத்தை துள்ளியமாக கண்டு களிக்கலாம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்ற சுற்றுலாத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
              இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி மற்றும் சிதம்பரம் சப் கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ ஆகியோர் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சென்றிருந்தபோது அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அவர்கள், சுற்றுலா மையமாக்க  ஏற்ற இடமாக சின்னவாய்க்கால் உள்ளது என சுற்றுலாத் துறைக்கு பரிந்துரை செய்தனர். அதன் முதற்படியாக அந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி 'தில்லை வனத்தில் ஓர் விடியல்' என்ற சூரிய உதய தரிசன விழா நடத்தப்பட்டது.
 
                 அப்போதைய சுற்றுலாத் துறை கமிஷனர் சக்திகாந்த்தாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இங்கிலாந்து, தென் அமெரிக்கா, பிரான்ஸ், கென்யா, பிரேசில், சுவிஸ்லாந்து உள் ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் பங்கேற்றனர். அதிகாலை 5 மணிக் கெல்லாம் அந்த திட்டு பகுதிக்கு வந்த அதிகாரிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் யோகா மற்றும் பின் னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் இசைச் கச்சேரியுடன் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
 
            இந்த சுற்றுலா மையத்தில் மாதத்தில் 2 முறையாவது சூரிய உதய நிகழ்ச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுலாத்துறை கமிஷனர் கூறினார். ஆனால் அதே ஆண்டு இறுதியில் ஏற் பட்ட சுனாமியால் விடியல் விழா முயற்சி கைவிடப்பட்டது. அதன் பிறகு 2008ம் ஆண்டு கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ முயற்சியால் ஏப்ரல் 20ம் தேதி  விடியல் விழா கொண்டாடப்பட்டது. ஆனால் விழாவிற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என தெரிகிறது.
 
                  சுனாமிக்கு பின் மாவட்ட நிர்வாகம், கிள்ளை பேரூராட்சி, சுற் றுலாத்துறை சார்பில் விமர்சையாக நடத்தப் பட்ட விழா தொடர்ந்து நடக்கும் என சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர் பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டு விடியல் விழா நடத்த எவரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த ஆண்டாவது கண்டிப்பாக விடியல் விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சுற் றுலா பயணிகள் காத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை முயற்சி எடுத்து விழா நடத்த முன் வர வேண்டும் என கோரிக் கையும் வைத்துள்ளனர்.

download this page as pdf

Read more »

வியாழன், மார்ச் 25, 2010

பண்ருட்டி உழவர் சந்தை முடங்கியது : விவசாயிகள் வருகை இல்லை


பண்ருட்டி: 

                     விவசாயிகள் வருகை இல்லாததால் பண்ருட்டி உழவர் சந்தை, எவருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது.

                    பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உழவர்சந்தையை கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அப்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். உழவர் சந்தை திறந்து மூன்று மாதங்கள் வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 2001ம் ஆண்டு முதல் மூடப்பட்டது.

                      பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 3.6.2006ல் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் உழவர் சந்தை திறந்த சில நாட்களில் பொதுமக்கள் வருகை குறைவால் விவசாயிகள் உழவர் சந்தைக்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு வராமல் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றதால் உழவர் சந்தை முடங்கியது.

                   ஆனால் தோட்டக் கலை, வேளாண்மை துறை அதிகாரிகள் உழவர் சந்தையில் தினந்தோறும் விவசாய பொருட்கள் வருவதாக மேலதிகாரிகளுக்கு பொய் கணக்கு காண்பித்து வந்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு நடந்த தமிழக கலெக்டர்கள் மாநாட் டில் தமிழக முதல்வர் தமிழகத்தில் பண்ருட்டி உழவர்சந்தை தான் செயல்படாமல் உள்ளது என குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

                     இதனையடுத்து அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு உழவர் சந்தை செயல்பட நகராட்சி கமிஷனர், வேளாண், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர், டி.எஸ்.பி., உள்ளிட்டோர் கொண்ட குழு மூலம் உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார். இக்குழுவினர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க ஏற்பாடு செய்தனர். அதிகாரிகள், போலீசார் கட்டாய அழைப்பினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து எடை போட்டு, அதிகாரிகளிடம் கணக்கு காட்டிவிட்டு மீண்டும் பண்ருட்டி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

                      கடந்த எம்.பி.,தேர்தலுக்கு பின் உழவர்சந்தையில் ராமர்,லட்சுமணன் சகோதரர்கள் மட்டுமே காய்கறி கடை வைத்துள்ளனர். விவசாயிகள் யாரும் விளைபொருட்கள் கொண்டு வருவதில்லை. இதனால் செயல்படாத உழவர்சந்தையாக உள்ளது.பண்ருட்டி சென்னை சாலையில் போக்குவரத் துக்கு இடையூறாக காய்கறிகள் கமிஷன் மண்டி வியாபாரிகள், கும்பகோணம் சாலையில் பலாப்பழம் விற்பவர்கள், அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை கடலூர் சாலையில் நடைபெறும் கொய்யா மார்க்கெட் ஆகியவற்றையாவது உழவர் சந்தையில் செயல் படுத்த அதிகாரிகள் முன் வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டு வரும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க இயலும்.இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

செவ்வாய், மார்ச் 16, 2010

மனநிலை பாதித்தவருக்கு உதவித்தொகை கலெக்டர் உத்தரவிட்டும் கிடைக்கவில்லை

கடலூர்:

                    கலெக்டர் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதால், மன நலம் பாதித்த சகோதரனை இடுப்பில் சுமந்து வந்து குறைகேட்பு கூட்டத்தில் இளம் பெண் மனு கொடுத்தார். நெய்வேலி அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகள் உமாமகேஸ்வரி(30). இவரது பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இவரது சகோதரர் ரமேஸ்வர்(27) மன நலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு உதவித்தொகை வழங்க கோரி 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் உமாமகேஸ்வரி மனு கொடுத்தார். அதனடிப்படையில் மனு பரிசீலனை செய்து ரமேஸ்வருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவரது மருத்துவ செலவிற்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை உதவித் தொகை வழங்கவில்லை. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு நேற்று சகோதரனை இடுப்பில் சுமந்தபடி வந்த உமாமகேஸ்வரி உதவித் தொகை கோரி மீண்டும் மனு கொடுத்தார்.

இது குறித்து உமா மகேஸ்வரி கூறியதாவது: 

                     தம்பி ரமேஸ்வர் மன நிலை பாதித்தவர். பெற் றோர்கள் இறந்துவிட்டதால் தம்பியை கவனிக்க வேறு யாரும் இல்லாதால் நானே கவனித்து வருகிறேன். இதனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது என் தம்பிக்கு மருத்துவச் செலவு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. வேறு வருமானம் இல்லாததால் என் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது என வேதனையுடன் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior