உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூரில் 63-வது குடியரசு தினம் கொண்டாட்டம்

கடலூர்:
 
           கடலூரில் 63-வது குடியரசு தினத்தையொட்டி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசியகொடியை ஏற்றி வைத்து 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
           கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 63வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 46 போலீசாருக்கு முதல்வர் பதக்கத்தை கலெக்டர் அணிவித்தார். தியாகிகளை கவுரவித்த, கலெக்டர் ராஜேந்திர ரத்னு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய்துறை சார்பில் 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 30 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையும், தானே புயலில் பயிர் பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.
 
         படகு சேதமடைந்த 10 மீனவர்களுக்கு நிவாரணம் உள்பட மொத்தம் 183 பேருக்கு 41 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் நடனம், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கூட்டு உடற்பயிற்சி, வேணுகோபாலபுரம் பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், வேலவிநாயகர்குப்பம் பள்ளி மாணவிகள், தேச பக்தி பாடல்களுக்கு நடகமாடினர்
 
             . கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு சான்றிதழ்களை வழங்கினார். எஸ்.பி., பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சேர்மன் சுப்ரமணியன், சப் கலெக்டர் கிரண் குராலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior