உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நடுவீரப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுவீரப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஜூன் 16, 2011

பண்ருட்டியில் அரசு பேருந்து நிறுத்தம்: மாணவர்கள் அவதி

நடுவீரப்பட்டு : 
   
              பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக நெல்லிக்குப்பம் செல்லும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

             பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு, சி.என். பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர், குச்சிப்பாளையம் வழியாக நெல்லிக்குப்பம் வரை அரசு பஸ் தடம் எண் 17 இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 6.30 மணிக்கு நடுவீரப்பட்டிற்கு வந்து செல்லும். இந்த பஸ்ஸில் நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் என அனைவரும் பாலூர் மற்றும் நெல்லிக்குப்பம் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சென்று வந்தனர். 

              இந்த பஸ் கடந்த 10 நாட்களாக வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பஸ் நெல்லிக்குப்பத்திலிருந்து நடுவீரப்பட்டு வழியாக காலை 7.45க்கு பண்ருட்டிக்கு சென்று வந்தது. இந்த பஸ்ஸில் தான் சாத்திப்பட்டு, நெல்லித்தோப்பு, நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பண்ருட்டியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்று படித்து வந்தனர். இந்த வழித்தடத்தில் இந்த ஒரு பஸ் தான் காலை நேரத்தில் உள்ளதால் இந்த பஸ்சை நம்பி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் சென்று வந்தனர். 

            இந்த பஸ் அடிக்கடி முன் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்படுவதால் நேரத்தில் செல்ல முடியாமல் காலை வேளையில் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

வியாழன், டிசம்பர் 23, 2010

பண்ருட்டியில் குறித்த நேரத்தில் இயக்காத பஸ்மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு:

           சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்மாம்பட்டு, நெல்லித்தோப்பு, இடையார்குப்பம், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் சாத்திப்பட்டு - கடலூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக அரசு பஸ் தடம் எண் 27 எஸ் இயக்கப்படுகிறது.

             இந்த பஸ் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கு வருவதில்லை. காலை நேரத்தில் சாத்திப்பட்டில் காலை 7.50க்கு கிளம்பி சி.என்.பாளையத்திற்கு 8 மணிக்கு வர வேண்டும். ஆனால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தாமதமாக வருகிறது.இந்த சிங்கிளில் தான் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

         சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு போய் சேர முடியாததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் நலனுக்காக விடப்பட்ட பஸ் காலதாமதமாக வந்தால் அவர்களுக்காக பஸ் இயக்கப்படுவதில் அர்த்தமில்லாமல் போகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பஸ்சை சரியான நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

செவ்வாய், அக்டோபர் 26, 2010

சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப்பணி மந்தம் மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு : 

               சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பள்ளியில் கூடுதல் மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் அரசு நபார்டு திட்டத்தின் கீழ் 70 லட்சம் மதிப்பில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை ஆகியவை கட்ட அனுமதி அளித்தது. இதற்கான கட்டடப்பணி கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பணிகள் துவங்கிய சில நாட்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                    மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் தற்காலிகமாக பாடம் நடத்தப்படுகிறது. மழை பெய்தால் வகுப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது. அதிகாரிகள் பள்ளியின் கட்டடப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதன், ஆகஸ்ட் 18, 2010

குறுவட்ட விளையாட்டுப் போட்டி சி.என்.பாளையம் மாணவி வெற்றி

நடுவீரப்பட்டு : 

                குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் கல்வி மாவட்ட மகளிர் உடற்திறன் கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடந்தது. 14 வயதுதிற்குட்பட்ட  மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தேவி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior