உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior