உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப்பணி மந்தம் மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு : 

               சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பள்ளியில் கூடுதல் மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் அரசு நபார்டு திட்டத்தின் கீழ் 70 லட்சம் மதிப்பில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை ஆகியவை கட்ட அனுமதி அளித்தது. இதற்கான கட்டடப்பணி கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பணிகள் துவங்கிய சில நாட்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                    மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் தற்காலிகமாக பாடம் நடத்தப்படுகிறது. மழை பெய்தால் வகுப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது. அதிகாரிகள் பள்ளியின் கட்டடப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior