உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நலத் திட்ட உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நலத் திட்ட உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

கடலூர்:

 
           கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
ஒவ்வொரு நாளும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வருமாறு:-

 
                குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 16-ந் தேதி காலையில் திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. குறவன்மேடு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. ஆடூர் அகரம் கிழக்கு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. வெ.பிள்ளை பாளையம் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா. குருவப்பன் பேட்டை, வரதராஜன்பேட்டை ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
           கடலூர் மாவட்டம் 17-ந் தேதி காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. நத்தமலை ஊராட்சி அலுவலகத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. விருத்தாசலம் அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா. அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா. முதனை ஊராட்சியில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா.

 
            18-ந் தேதி உள்மருவாய் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. வடலூர் பேரூராட்சியில் 5 புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா. வடலூர் பேரூராட்சி வார்டு 9, 10-ல் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
          மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசுகட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Read more »

வேப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

சிறுபாக்கம்:

              வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

              அறக்கட்டளை தாளாளர் முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் பவானி, கனிமொழி முன்னிலை வகித்தனர். முதல்வர் பசுபதி வரவேற்றார்.விழாவில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் கலியபெருமாள் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் மிஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கல்லூரி முதல்வர்கள் ராஜேந் திரன், பிரபாகர், அன்பு, தி.மு.க., ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, ராஜேந்திரன், வெங் கடேசன், குமணன், ஊராட்சி தலைவர்கள் ரவிக்குமார், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, ஜூலை 02, 2010

கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி திட்டத்தில் 2.10 லட்சம்"கான்கிரீட்' வீடுகள்: கலெக்டர் தகவல்

கடலூர்: 

              "கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில்  2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரப்படும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

               கடலூர் அடுத்த பூச்சிமேடு கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ராதிகா வரவேற்றார். 

கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி, வருவாய்த்துறை, சமூகநலத் துறை, தோட்டக்கலைத்துறை, உட்பட பல்வேறு துறைகளின் மூலம் 96 பேருக்கு 6.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: 

                 பூச்சிமேடு கிராமத்தில் 8.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக் கூடமும், காயல்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தை 1 லட்சம் ரூபாயில் பழுது நீக்கவும் கலெக்டர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். காயல்பட்டு காலனி பகுதியில் 3 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் வெட்டப்படும். முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில்  2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 6 ஆண்டுகளில் "கான்கிரீட்' வீடுகளாக கட்டித் தரப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார். 

                      முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் கந்தசாமி, ஆர்.டி.ஓ., கேசவமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி துணைத் தலைவர் திருநாவுக் கரசு நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 20, 2010

அரசு நலத்திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படும்: கலெக்டர்

 கடலூர்: 

              அரசு நலத் திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்கள் வரப்பெற்றது.  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் திருமண உதவி திட்டத்தின் கீழ் 31 நபர்களுக்கு தலா 20 ரூபாய் வீதம் 6.20 லட்சம் காசோலையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 நபர்களுக்கு 27 ஆயிரத்து 290 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் எவிலின், சிவகாமிக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால் உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து சிறப்பு குழந்தைகள் காப்பக அரங்கிற்கு 24 ஆயிரத்து 355 மதிப்பிலான ஆம்பிலிபையர் மைக், ஸ்பீக்கர் மைக் ஸ்டாண்டு ஆகியவற்றை வழங்கினார். 

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில் 

                  'அமைச்சர் குறிஞ்சிப்பாடி பகுதியில் மக்களை சந்தித்த போது இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசு வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசு வழங்குகிற நலத்திட்டங்கள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அகதி முகாமைச் சேர்ந்த செபஸ்டியானுக்கு திருமண உதவித்திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

download this page as pdf

Read more »

திங்கள், பிப்ரவரி 22, 2010

நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஆதிபராசக்தி மன்ற ஆண்டு விழாவையொட்டி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மன்ற தலைவர் லஷ்மணன் முன்னிலை வகித்தார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு சைக் கிள், காதுகேளாதவர்க்கு கருவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அண் ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி வழங்கினார். விரிவுரையாளர்கள் பாலகுமார், ஞானகுமார், டாக்டர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior