உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

கடலூர்:

 
           கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
ஒவ்வொரு நாளும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வருமாறு:-

 
                குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 16-ந் தேதி காலையில் திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. குறவன்மேடு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. ஆடூர் அகரம் கிழக்கு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. வெ.பிள்ளை பாளையம் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா. குருவப்பன் பேட்டை, வரதராஜன்பேட்டை ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
           கடலூர் மாவட்டம் 17-ந் தேதி காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. நத்தமலை ஊராட்சி அலுவலகத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. விருத்தாசலம் அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா. அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா. முதனை ஊராட்சியில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா.

 
            18-ந் தேதி உள்மருவாய் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. வடலூர் பேரூராட்சியில் 5 புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா. வடலூர் பேரூராட்சி வார்டு 9, 10-ல் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
          மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசுகட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior