உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

வேப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

சிறுபாக்கம்:

              வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

              அறக்கட்டளை தாளாளர் முன்னாள் எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் பவானி, கனிமொழி முன்னிலை வகித்தனர். முதல்வர் பசுபதி வரவேற்றார்.விழாவில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் கலியபெருமாள் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் மிஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கல்லூரி முதல்வர்கள் ராஜேந் திரன், பிரபாகர், அன்பு, தி.மு.க., ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, ராஜேந்திரன், வெங் கடேசன், குமணன், ஊராட்சி தலைவர்கள் ரவிக்குமார், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior