உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

50 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம்,நவ.1:

சிதம்பரம் ரோட்டரி சங்கம் பொன் விழாவை முன்னிட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 50ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
÷அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பழ.முத்துவீரப்பன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி தலைமை வகித்தார்.
÷முன்னாள் ரோட்டரி சங்க கவர்னர்கள் டாக்டர் எஸ்.அருள்மொழிசெல்வன், துணைஆளுநர் கே.சீனுவாசன், முன்னாள் தலைவர் இ.மகபூப்உசேன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
÷ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார்.
செயலர் எம்.எஸ்.ஆர்.ரவி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior