உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

மக்கள் நலப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர், அக். 30:

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பண்ருட்டி ஒன்றியம், மாளிகம்பட்டு, காட்டுமன்னார் கோயில் ஒன்றியம், ஸ்ரீஆதிவ ராக நல்லூர், கீரப்பாளையம் ஒன்றியம், பூந்தோட்டம், ஓடாக்க நல்லூர், மேல்புவனகிரி ஒன்றியம், தீர்த்தாம்பாளையம், வடகிருஷ்ணாபுரம், கம்மாபுரம் ஒன்றியம், கீணனூர், விருத்தா சலம் ஒன்றியம் எம்.புதூர், சாத்துக்கூடல் கீழ்பாதி, கட்டிய நல்லூர், கோமங்கலம், மங்களூர் ஒன்றியம், மேலக்கல்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப் பட உள்ளனர். வட்டார அளவி லான தேர்வுக்குழு இவர்களைத் தேர்வு செய்யும். வயது வரம்பு 9-11-2009 அன்று 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த வராகவும், அங்கேயே வசிப்பவ ராகவும் இருக்க வேண்டும். தகுதியுடையோர், சம்பந்தப் பட்ட வட்டாட்சியர் அலுவல கத்துக்கு விண்ணப்பங்களை நவம்பர் 4-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior