உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் ஜனவரியில் இயக்கப்படும்


கடலூர், நவ.1:


விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில்கள் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று, தென்னக ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
÷விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூர ரயில்பாதை ரூ. 270 கோடியில் அகலப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. 2007 ஜனவரியில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மயிலாடுதுறை - சீர்காழி இடையே 22 கி.மீ. தூரம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. விழுப்புரம் - கடலூர் இடையேயும் ரயில்பாதை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. விழுப்புரம் - சிதம்பரம் இடையே பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கத்தில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் சனிக்கிழமை பயணம் செய்து திருச்சி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் சோதனை ஓட்டம் நடத்தினார். விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அவரது ரயில், மாலை 4-10 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது.
÷ரயில் நிலையத்தில் பொதுமேலாளர் ஜெயந்த் கூறியது:
÷பயணிகள் வசதிக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படும். ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டதும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட மாட்டாது. அகலப் பாதைத் திட்டம் முடிவடைந்ததும் கடலூர் - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்றார் ஜெயந்த்.
÷தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில், நெல்லிக்குப்பம் ரயில்நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே மதில் சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior