உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 04, 2009

இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கடலூர், நவ. 1:

வளர் இளம்பெண்களிடம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, கோ. அய்யப்பன் எம்.எல்.ஏ. வலியறுத்தினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கடலூர் திருப்பாப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஊட்டச் சத்து வார விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து, ஆரோக்கிய போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், பள்ளிகளுக்கு மின்விளக்குகள், மின் விசிறிகள் வாங்க தனது உள்ளுர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கினார். மேலும், சொந்த நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் வழங்கி, அதை அறக்கட்டளை மூலம் வங்கியில் டெபாஸிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தை, மாணவிகளிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் பயன்படுத்த அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
புவனேஸ்வரி வரவேற்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior