உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 17, 2009

அண்ணன் மகன் இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

விருத்தாசலம், நவ.16-

விருத்தாசலம் அருகே கீழ் கோட்டாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சாந்தா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தக்கு முன் சாந்தாவின் அண்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் திடீரென இறந்து விட்டார். வெங்கடேசன் மீது மிகவும் பாசம் கொண்ட சாந்தாவால் அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனவருத்தத்துடன் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாந்தா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் சாந்தா இல்லை.

இதற்கிடையே கீழ்கொட்டாரக்குப்பத்தில் திடீரென சம்பந்தம் என்பவரின் விவசாய கிணற்றில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இதைத் தொடர்ந்து சண்முகம் அங்கு சென்று பார்த்த போது பிணமாக கிடந்தது சாந்தா என்பதை உறுதி செய்தார். தனது அண்ணன் மகன் இறந்த சோகத்தில் சாந்தா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior