உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

புதிய வேலை​வாய்ப்பு கொள்​கை வேண்​டும்

​ நெய்வேலி,​​ டிச.​ 10: 
 
                         சுற்​றுப்​புற கிராம மக்​க​ளுக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் என்.எல்.சி.​ நிறு​வ​னம் புதிய வேலை​வாய்ப்பு கொள்​கையை உரு​வாக்க வேண்​டும் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் சீத்​தா​ரா​மன் கேட்​டுக் கொண்​டார்.​
 
                        40 ஆண்​டு​கள் பழ​மை​வாய்ந்த என்​எல்சி முதல் அனல்​மின் நிலை​யத்தை படிப்​ப​டி​யாக மூடி​விட்டு,​​ அதன் அரு​கில் ​ முன்​னர் கரி​கட்டி ஆலை இயங்கி வந்த இடத்​தில் 513 ஏக்​கர் பரப்​ப​ள​வில் ரூ.​ 5 ஆயி​ரத்து 596 கோடி மதிப்​பீட்​டில் 1000 மெகா​வாட் மின்​னுற்​பத்தி திறன்​கொண்ட புதிய அனல்​மின் ​ நிலை​யம் அமைக்க என்​எல்சி திட்​ட​மிட்​டுள்​ளது.​
 
                  இந்த அனல்​மின் நிலை​யம் அமைப்​ப​தற்​கான நிலத்​தில் 7 ஏக்​கர் மாநில அரசு வச​மும்,​​ மீத​முள்ள 506 ஏக்​கர் என்​எல்சி வசமே இருப்​ப​தால் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் எண்​ணம் நிறு​வ​னத்​திற்கு இல்லை.​
                      இப்​பு​திய திட்​டத்​திற்கு மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​ச​கத்​தின் ஒப்​பு​தல் பெற​வேண்​டி​யுள்ள நிலை​யில்,​​ அப்​ப​கு​தியை சுற்​றி​யுள்ள பொது​மக்​க​ளி​டம் கருத்​துக் கேட்பு கூட்​டம் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​÷இக் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் சீத்​தா​ரா​மன்,​​ மாவட்ட மாசுக் கட்​டுப்​பாட்டு பொறி​யா​ளர் சேகர் மற்​றும் ​ என்​எல்சி அதி​கா​ரி​கள் பொது​மக்​க​ளி​டம் கருத்து கேட்​ட​னர்.​÷கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பொது​மக்​க​ளில் பலர்,​​ ""அனல்​மின் நிலை​யப் பணி​கள் தொடங்​கும்​போது,​​ சுற்​றுப்​புற கிராம மக்​க​ளுக்கு வேலை​வாய்ப்பு அளிக்​க​வேண்​டும்.​ அனல்​மின் நிலை​யம் அமை​ய​வுள்ள இடத்​திற்கு அரு​கில் உள்ள கொல்​லி​ருப்பு கிரா​மத்​திற்கு என்​எல்சி நிறு​வ​னத்​தின் சார்​பில் சுற்​றுப்​புற மேம்​பாட்டு நிதி​யின் கீழ் அடிப்​படை வச​தி​கள் ​ செய்​து​த​ர​வேண்​டும்'' என்று கோரி​னர்.​÷இ ​தை​ய​டுத்து பேசிய மாவட்ட ஆட்​சி​யர் சீத்​தா​ரா​மன்,​​ "சுற்​றுப்​புற மக்​க​ளுக்கு வேலை​வாய்ப்பு அளிப்​பது தொடர்​பாக என்​எல்சி நிர்​வா​கம் புதிய வேலை​வாய்ப்பு கொள்கை ஒன்றை உரு​வாக்க வேண்​டும்' என்​றார்.​
 
                 என் ​எல்சி நிறு​வ​னம் சார்​பில் சுற்​றுச்​சூ​ழலை பாது​காக்​கும் பொருட்டு,​​ அனல்​மின் நிலை​யம் அமை​ய​வுள்ள இடத்தி​லி​ருந்து 5 கி.மீ.​ சுற்​ற​ள​வுக்​குள் உள்ள ​ கிராம மக்​க​ளுக்கு பயன்​த​ரும் மரக்​கன்​று​களை இல​வ​ச​மாக வழங்கி அவற்றை வளர்க்க அறி​வு​றுத்​த​வேண்​டும்.​ என்​எல்சி நில எடுப்​புத்​துறை சார்​பில்,​​ நிறு​வ​னத்​தைச் சுற்​றி​யுள்ள கிரா​மங்​க​ளில் மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​(நில எடுப்பு)​ தலை​மை​யில் 3 மாதத்​திற்கு ஒரு​முறை பொது​மக்​கள் குறை​கேட்பு கூட்​டம் நடத்தி அவர்​க​ளின் குறை​களை நிவர்த்தி செய்​ய​வேண்​டும்'' என்​றார்.​
 
                 மே​லும் என்​எல்சி சார்​பில் இது​வரை சுற்​றுப்​புற கிரா​மங்​க​ளில் சுற்​றுப்​புற மேம்​பாட்டு நிதி​யின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட பணி​கள் தொடர்​பான வெள்​ளை​ய​றிக்கை வெளி​யி​டு​வ​தோடு,​​ ஒவ்​வொரு பஞ்​சா​யத்​தி​லும் நடந்​து​மு​டிந்த பணி​க​ளின் பட்​டி​யலை பஞ்​சா​யத்து அலு​வ​ல​கத்​தில் பொது​மக்​க​ளின் ​ பார்​வைக்கு வைக்​கப்​பட வேண்​டும் என்​றும் ஆட்​சி​யர் ​ அறி​வு​றுத்​தி​னார்.​
 
           கூட்​டத்​தில் பேசிய என்​எல்சி நில எடுப்​புத்​துறை பொது​மே​லா​ளர் என்.எஸ்.ராம​லிங்​கம்,​​ மற்​றும் திட்​டத்​துறை பொது​மே​லா​ளர் வேத​கிரி ஆகி​யோர்,​​ மாவட்ட ஆட்​சி​ய​ரின் பரிந்​து​ரை​கள் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்டு நடை​மு​றைப்​ப​டுத்​தப்​ப​டும்.​ பொது​மக்​க​ளின் கருத்​து​கள் அடிப்​ப​டை​யில் அவர்​க​ளின் தேவையை பூர்த்தி செய்ய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று தெரி​வித்​த​னர்.​ இக் கூட்​டத்​தில் நிறு​வன இயக்​கு​நர்​கள் பி.சுரேந்​தி​ர​மோ​கன்,​​ வி.சேது​ரா​மன்,​​ பொது​மே​லா​ளர் அழ​கர்,​​ கார்த்​தி​கே​யன்,​​ சிவ​சங்​க​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior