உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

நெய்வேலியில் மூடப்பட்ட மண்ணெண்ணெய் பங்க்: மீண்டும் திறக்க அமைச்சர் உத்தரவு


நெய்வேலி:
 
                  நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மண்ணெண்ணெய் பங்க்கை மாற்று இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மற்றும் நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஊழியர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.அப்போது மந்தாரக்குப்பத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த தானியங்கி மண்ணெண்ணெய் பங்க்  மூடப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் விளக்கம் பெற்றபின் பதிலளித்த அமைச்சர், அதற்கான மாற்றுஇடம் குறித்து என்எல்சி நிர்வாகத்திடம் கேட்டு, அவ்விடத்தில் புதிய மண்ணெண்ணெய் பங்க் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ. நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior