உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

மாவட்டம்தோறும் தகவல் ஆணையர்களை நியமிக்க நுகர்வோர் மன்றம் கோரிக்கை


பண்ருட்டி:
 
           தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அதிக மனுக்கள் வருவதால் தீர்ப்பு வழங்க காலதாமதமாகிறது. இதைப் போக்க மாவட்டம் தோறும் தகவல்  ஆணையாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பண்ருட்டி தாலுக்கா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில்  பண்ருட்டி கடைகளில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுவது, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்.அதிக பணம் வசூல் செய்யும் தனியார் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய  வேண்டுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க ஆலோசகர் எஸ்.சையது இஸ்மாயில், கெüரவத் தலைவர் தங்க.தெய்வசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஜி.உமாபதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior