உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முறையாக "சிசேரியன்' மூலம் குழந்தை

ஸ்ரீமுஷ்ணம் : 

                     ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டத்தில் முதன் முறையாக "சிசேரியன்' சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

                      ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் நடந்தது. நகரப்பாடியைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி வீரராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமையில் டாக்டர்கள் ஆண்டனி ராஜ், நித்யா, சிவப்பிரியா மற்றும் சிறப்பு டாக்டர்கள் விஜயகுமார், செல்வராஜ், மணிமொழி, சுரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை (சிசேரியன்) சிகிச்சை செய்தனர். இதில் வீரராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் "சிசேரியன்' மூலம் பிறந்த குழந்தைக்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஒரு கிராம் மோதிரம் அணிவித்து ஆடைகள் வழங்கி கருணாநிதி என பெயர் சூட்டினார். மாவட்டத்திலேயே ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் முதலாக "சிசேரியன்' மூலம் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior