உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

சிதம்பரம் சிறுவனுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது

சிதம்பரம்.:

                   சிதம்பரம் மணலூர் எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் எம்.குருவிஷ்ணுவுக்கு அண்மையில் நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதை சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் வழங்கி கௌரவித்துள்ளார்.

                      இந் நிகழ்ச்சியில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், சென்னை சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டி.எஸ்.சீனுவாசமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறுவன் குருவிஷ்ணு கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 5-க்கும் மேற்பட்ட பொதுநிகழ்ச்சிகள் மற்றும் காரைக்கால் எஃப்.எம். ரேடியோவில் சிறுமலர்கள் நிகழ்ச்சி மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார்.

                               மேலும் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நாட்டின் தூய்மை, நம் வாழ்வின் மேன்மை ஆகிய தலைப்பில் புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையின் மூலம் 2,500 மரக்கன்றுகளை பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior