உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

கடலூர்-விருத்தாசலம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதம்


 
கடலூர் :  
 
                   கடலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடந்து வருவதால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.கடலூர்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் முதுநகர் பச்சாங்குப்பம் அருகே ரயில்வே மேம்பாலம்  12 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.இதில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திட்டங்கள் பிரிவு மூலம், கட்ட வேண்டிய பணிகள் 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
 
                 இதனால் இப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து வாகனங்களும், கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று, காரைக்காடு அல்லது ஆலப்பாக்கம் அருகே திரும்பி, ஏரிக்கரை சந்திப்பு சாலை, குள்ளஞ்சாவடி வழியாக விருத்தாசலம் சாலையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.காரைக்காடு வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் சாலை, ஏரிக்கரைச் சாலை வழியாக குள்ளஞ்சாவடி செல்லும் சாலை ஆகியன மிகவும் குறுகியதாக இருப்பதால் பஸ்கள் மிகவும் சிரமப்பட்டு, குறைந்த வேகத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. 
 
              மேலும் பஸ்கள் சுற்றிக் கொண்டு செல்வதால் கூடுதலாக 8 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய நிலையும், கிராமப்புறச் சாலைகள் வழியாகச் செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதாலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஏற்கெனவே போக்குவரத்து நிறைந்த கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. பஸ்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரித்து இருப்பதாக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
                    மேலும் மாற்றுப் பாதையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், சேடப்பாளையம், அன்னவல்லி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 40 கிராம மக்கள் போதிய பஸ்வசதி இன்றி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டதால் மேலும் பணிகள் தாமதம் அடைய  வாய்ப்பு உள்ளது.பாலம் கட்டும் பணி தொடங்கியபோது இருந்த வேகம், தற்போது வெகுவாகக் குறைந்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக வேலை எதுவும் நடைபெறவில்லை. 
 
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                         "மேம்பாலம் கட்டும் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டியதாயிற்று. மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும்.எனினும் பணிகள் முழுவதும் முடிவடைய 18 மாதங்கள் ஆகும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior