உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

விருத்தாசலத்தில் உடைந்த தரைப்பாலத்தால் அடிக்கடி விபத்து

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தை அடுத்த கோ.ஆதனூர் மற்றும் சொட்டவனம் கிராமத்தில் தரைப்பாலம், உடைந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

                     விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்டது கோ.ஆதனூர் மற்றும் சொட்டவனம் கிராமம். கோ.ஆதனூர் மற்றும் அதற்கு உள்பட்ட சொட்டவனம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு கிராமங்களையும் இணைக்கக்கூடிய வகையில் ஆங்கிலேயர் காலத்தில் 2 கண்மாய் கொண்ட பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் அதன் அருகிலேயே சிறிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

                    கார்குடல் அணைக்கட்டிலிருந்து வெள்ளப்பெருக்கு காலத்தில் கோ.ஆதனூர் தரைப்பாலத்தை கடந்து பெரிய ஏரியை அடையும்.÷இந்த ஏரியின் நீரை கொண்டு 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த விளைப்பொருள்களை விருத்தாசலம் உள்ளிட்ட நகரங்களுக்கு எடுத்து வருவதற்கும், சொட்டவனம், மேலப்பாலையூர், கீழப்பாலையூர், கோபாலபுரம், வல்லியம் உள்ளிட்ட கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் கோ.ஆதனூர் தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோ.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைகேட்டபோது, கூறியது: 

                      "கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள இந்த பாலம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இது அதிக விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. சில நாள்களுக்கு முன்புகூட பஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கும். பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு உடனடியாகத் தலையிட்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கேட்டுக் கொண்டார்.÷எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி கோ.ஆதனூர் தரைப்பாலத்தை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior