உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

பன்றிக் காய்ச்சல்: விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

நெய்வேலி:

                     நெய்வேலி நகரில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை என்எல்சி நகர நிர்வாகம் பொது மக்களுக்கு விநியோகித்து வருகிறது. 

                   நெய்வேலியில் பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என்எல்சி நகர நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில், பன்றிக்காய்ச்சல் குறித்த அச்சத்தை போக்குதல், மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அறிகுறிகள், பன்றிக் காய்ச்சலை தவிர்க்க செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது. மேலும் நகரில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் பொருட்டு நகர நிர்வாகம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் எனவும் என்எல்சி நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior