உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

நெல்லிக்குப்பத்தில் இடவசதியின்றி நூலககட்டடம்: வாசகர்கள் அவதி

நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் நூலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.நெல்லிக்குப்பம் நகரின் மத்தியில் கிளை நூலகத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்குவதால் ஏராளமான செய்தித் தாள்களும், வார, மாத இதழ்களும் வாங்குகின்றனர். ஆனால் இட வசதியின்றி தற்போது சிறிய அறையில் நூலகம் செயல்படுகிறது. 

                இதனால் புதிய புத்தகங்களை அடுக்க இடமில்லை.தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரும் நூலகம் சாலையோரம் இருப்பதால் வாகனங்கள் எழுப்பும் ஒலியும், அள வுக்கு அதிகமான தூசு படிகிறது. மேலும் அருகில் ஓட்டல் இருப்பதால் கழிவுகளின் துர்நாற்றம் வீசுவதால் வாசகர்கள் நிம்மதியாக உட்கார்ந்து படிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக நூலகத்துக்கு அமைதியான இடம் ஒதுக்கி தர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர். 

                இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சியில் இடம் ஒதுக்கிக் கொடுத் தால் நூலகத்துறை சார்பில் கட்டடம் கட்டிக் கொள்ளத் தயாராக உள்ளனர். அதற்கான நிதியும் உள்ளது. உடன் வாசகர்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் நூலகத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior