உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

கடலூரில் இடிந்து விழும் நிலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு


புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும், இடிந்து விழும் நிலையில் காணப்படும் கடலூர் செம்மண்டலம் அரசு வீட்டுவசதி வாரிய வாடகைக் குடியிருப்பு.
கடலூர்:

               இடிந்து விழும் நிலையில் அச்சத்தை கிளப்பி வருகிறது கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்பு.  இங்கு மொத்தம் 630 வீடுகள் உள்ளன. இவற்றில் 330 வீடுகள் 1960-க்கு முன்னால் கட்டப்பட்டவை. மீதமுள்ள 300 வீடுகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.  

                இப்போது 200 வீடுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து போய்விட்டது.  இங்கு குடியிருக்கும் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் வாடகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே தொகையில் இதைவிட வசதியான வீடுகள், கடலூர் நகரத்தில் வாடகைக்கு கிடைக்கும். எனவே, இந்தக் குடியிருப்பை விட்டு அரசு ஊழியர்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.  பெரும்பகுதி, புதர்கள் மண்டி சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக மாறிவிட்டது இக்குடியிருப்பு. ஆக்கிரமிப்பைத் தடுக்க சுற்றுச்சுவர் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டுவசதி வாரியம் இட்ட உத்தரவு காற்றோடு போச்சு.  

                பராமரிப்பு இல்லாததால் வீட்டின் சுவர்கள் அனைத்தும் மழைநீர் கசிவால் பலமிழந்து காணப்படுகிறது.  அனைத்து வீடுகளுக்கும், இரண்டே இரண்டு செப்டிக் டேங்குகள். அவைகளுக்கு மூடி கிடையாது. கழிவுநீர் எப்போதும் வழிந்தோடி தொற்று நோய்க்கு அச்சாரம் போட்டு வருகிறது.  அதேபோல் குடிநீர் தொட்டிகளுக்கும் மூடி கிடையாது. இதை சுத்தப்படுத்தி ஆண்டுக்கணக்கில் ஆகிறது என்கிறார்கள் அங்கு குடியிருப்போர்.  

                 அரசு ஊழியர்கள் குடியிருப்பின் சாலைகள் மற்றும் பொது இடங்களை, நகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டும், நகராட்சி இன்னமும் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார் கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன்.  

கடலூர் நகர அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு. மருதவாணன் கூறுகையில், 

                     தரமான குடிநீர் இல்லை. பஸ்சிற்கு க்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். வசிக்கத் தகுதியான வீடுகளைச் செப்பனிட்டு, மற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்பைக் கட்ட வேண்டும்.  கடலூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை, வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்கிறார் மருதவாணன்.  

இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அலுவலர்கள் கூறியது 

                     ,இக்குடியிருப்பைச் சீரமைக்க வீட்டுவசதி வாரியம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior