உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

கடலூர் வில்வநகர் பகுதியில்தொட்டிலில் தூங்கிய குழந்தையை வெறிநாய் கடித்து குதறியது


கடலூர் : 

                  கடலூர் வில்வநகர் பகுதியில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துக் குதறியது. வெறிநாயின் அட்டகாசத்தால் கன்றுக்குட்டி, பூனை இறந்தன.

                   கடலூர் வில்வநகர் பாப்பான்தோட்டம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் ஒன்று அப்பகுதியில் சென்றவர்களை மட்டுமின்றி ஆடு, மாடு, பூனை, நாய்கள் என அனைத்தையும் கடித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள முருகன் என்பவர் வீட்டில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது ஆஷா என்ற குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கடித்துக் குதறியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாயை அடித்து விரட்டினர். 

                      அப்பகுதியில் உள்ளோர் வெறிபிடித்து திரியும் நாயை அடித்துக் கொல்ல தடியுடன் தேடி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த விஷால் (3), தினேஷ் (15) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை கடித்தது. மேலும் நேற்று காலை அம்மாபொண்னு என்பவரின் கன்றுக்குட்டி மற்றும் தெருவில் உள்ள பூனை, நாய்கள் என கடித்துக் குதறியது. இதில் கன்றுக்குட்டியும், பூனையும் அதே இடத்தில் இறந்தன. குழந்தை ஆஷா கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வெறிநாயின் அட்டகாசத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் நாயை துரத்திச்சென்று உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொன்றனர்.

                         அடித்துக் கொல்லப்பட்ட வெறிநாய் அந்த பகுதியில் உள்ள நாய்களுடன் சண்டையிட்டு அவைகளை கடித்துள்ளதால் அந்த நாய்கள் கடித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior