உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 23, 2010

கடலூரில் இன்று முழு அடைப்பு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

                பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி கடலூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

               40 கோடி ரூபாய் செலவில் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், இதுவரை முடிவு பெறவில்லை. இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூர் நகரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

                  முழு அடைப்பு போராட்டத்தால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. பேருந்து நிலையம் உட்பட பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ இயங்காததால் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பியுள்ளன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முழு அடைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேலை நிறு

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior