உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணி

கடலூர் : 

               பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பிறந்த தேதி சரிபார்ப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. 

              கடலூர் மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ, மாணவிகளும்,  விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட 27 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.  இதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் இறுதி பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணி நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது.  

                மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.  நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இரு கல்வி மாவட்டங்களிலிருந்தும் 170 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.  மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் அனுப்பப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior