உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணி: 115 பேர் தேர்வு

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் 108  ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணலில் 115 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர்காணல் கடந்த 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். 

                108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான  நடந்த நேர்காணலில் குறித்த விவரங்களை மண்டல மேலாளர் பிரபுதாஸ் மற்றும் மனித வள மேம்பாடு  நிறுவனர் அப்பாதுரை ஆகியோர் எடுத்துக் கூறினர். பின்னர் நடந்த நேர்காணலில் மெடிக்கல் டெக்னீஷியன் பதவிக்கு 52 பேரும், ஆம்புலன்ஸ் டிரைவர் பதவிக்கு 63 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வரும் ஜனவரி 3ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சென்னை அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு பின் பணி நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 115 பேருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) வைத்தியநாதன் வாழ்த்து தெரிவித்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior