உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 14, 2010

சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை

 
சிதம்பரம்
 
                 நேற்று நள்ளிரவு சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் ஒரு முதலை புகுந்தது. அதனைக்கண்டு அந்த வீட்டு நாய் குரைத்ததால், படிகள் வழியாக மாடிக்கு முதலை விரைந்தது.
 
               எனினும் நாய் தொடர்ந்து குரைத்ததால், ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்விழித்தனர். மாடிப்படியை நோக்கி நாய் குரைத்ததால், “திருடன் புகுந்திருக்கலாமோ?” என்ற சந்தேகம் ஏற்பட்டது. உருட்டுக்கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சகிதமாக மாடிக்கு சென்ற போது, ஒரு மூலையில் முதலை பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
 
                  இது பற்றி ஊருக்குள் சேதி பரவியதால் பீதியடைந்த கிராமத்தினர் ரமேஷ் வீட்டுக்கு திரண்டு சென்றனர். நீண்டநேரம் போராடி, போக்குகாட்டிய முதலையை பிடித்து கயிற்றில் கட்டிய பிறகுதான் நிம்மதியடைந்தனர். பிடிபட்டமுதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior